ஆப்நகரம்

திருமண ஏக்கம்... போலீஸ் தொந்தரவு... நெல்லை இளம்பெண் பரிதாப மரணம்..!

நெல்லை அருகே சகோதரனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றதால் திருமணமாகாமல் இருந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Samayam Tamil 13 Oct 2020, 7:02 pm
நெல்லை மாவட்டம் கொண்ட நகரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீது சுத்தமல்லி, சீதபற்பநல்லூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதனால் இவரது வீட்டிற்கு அடிக்கடி காவல்துறையினர் வழக்கு தொடர்பாக தேடி வந்து விசாரணை நடத்துவது வழக்கம்.
Samayam Tamil isakkiyammal


இதன் காரணமாக இவரது சகோதரி இசக்கியம்மாள் (20) என்பவருக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை தர பலர் யோசித்து வந்துள்ளனர். இதனால் வரன் கிடைக்காமல் திருமணம் நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் மாரியப்பன் திருந்தி வாழ்வதற்கு காவல் நிலையத்தில் பிரமான பத்திரம் அளித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரது சகோதரி இசக்கியம்மாளுக்கு அவரது உறவினர் தரப்பில் இருந்து மாப்பிள்ளை தருவதாக சொல்லி பேசி முடிக்கும் நிலையில், கடந்த 3ந்தேதி முடித்துவைக்கப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பாக போலீஸார் விசாரணை செய்ய வந்துள்ளனர்.

இதனால் மாப்பிளை தர தயாராக இருந்த உறவினரும் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் வீட்டுக்கு வருவதை விரும்பாத நிலையில் மாப்பிள்ளை தர மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த இசக்கியம்மாள் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினருக்கு அரிவாள் வெட்டு..! சென்னையில் பரபரப்பு

இதனை கண்ட வீட்டார் இசக்கியம்மாளை மீட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இசக்கியம்மாளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டுக்கு வருவதை காரணம் காட்டி திருமணத்திற்கு மாப்பிள்ளை தர மறுத்ததால் இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி