ஆப்நகரம்

நாம கடவுள் கிட்ட போறோம்... குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..!

விழுப்புரம் அருகே குடும்ப சண்டையின் காரணமாக குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Sep 2020, 9:23 pm
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தைச் சேர்ந்த தம்பதி கன்னியப்பன் - புஷ்பா. இவர்களுக்கு திருமணமாகி சில வருடங்கள் ஆன நிலையில் நான்கு வயதில் ஆண் குழந்தைக்கு உள்ளான். இந்த நிலையில் சென்னையில் உள்ள கேஸ் கம்பெனியில் டெலிவரி மேனாக வேலை பார்த்து வந்தார் கன்னியப்பன்.
Samayam Tamil died woman


கொரோனா ஊரடங்கினால் வேலை இழந்த அவர் விழுப்புரத்துக்கு சென்று அங்கு வசித்து வருகிறார். வேலை போன விரக்தியில் இருந்த கன்னியப்பன் அடிக்கடி மது குடித்து வந்ததால் புஷ்பாவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவனின் குடிப்பழக்கமும், தகாத வார்த்தைகளும் குடும்ப சந்தோசத்தை மெல்ல மெல்ல கெடுத்து வந்ததால் புஷ்பா தினம் தினம் அழுது வந்துள்ளார். ஆனாலும், கன்னியப்பன் குடிப்பழக்கத்தை விடமால், புஷ்பாவிடம் சண்டையை தொடர்ந்துள்ளார். இதனால் குடும்ப வாழ்க்கையை வெறுத்துக்கொண்ட புஷ்பா தந்து குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆசிரியரை கொன்ற நபர் போலீஸ் கண்ணெதிரே அடித்துக்கொலை! பதைபதைக்கும் வீடியோ

அதையடுத்து கீழ்வாலை பகுதியில் இருந்த கிணற்றுக்கு அருகே சென்று மகனின் முகத்தை பார்த்து அழுதுகொண்டிருந்த அவர், மகனை அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி கோபித்துக்கொண்டு வெளியேறியதால் அவரை தேடி சென்ற கன்னியப்பன், கீழ்வாலை கிணற்றின் ஓரம் இருந்த புஷ்பாவின் செருப்பை பார்த்துள்ளார். அதன் பின்னர், போலீசுக்கு தகவல் கொடுத்துதான் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மீட்பு படையினர் உதவியுடன் கிணற்றுக்குள் மூழ்கியிருந்த தாய், மகன் இருவரது உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மேற்படி விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி