ஆப்நகரம்

கந்து வட்டிக்கு கடன் வாங்கி வட்டிக்கு விட்ட பெண்ணை கொண்டு சென்ற மரணம்..!

திருவாரூர் அருகே கோயில் குளத்தில் முழுகி தற்கொலை செய்துகொண்ட பெண்ணை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 27 Sep 2020, 6:18 pm
திருவாரூர் மாவட்டம் புகழ் மிக்க தியாகராஜன் கோவில் அருகே உள்ளது கமலாலயம் குளம். இந்த குளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்கள் குளித்துக்கொண்டிருந்த வேளையில் பெண் ஒருவர் குளத்தில் இறங்கி ஆழத்தை நோக்கி சென்றுள்ளார். பின்னர் அவர் முழுவதுமாக மூழ்கி காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் சில நொடிகளில் நடந்ததால் செய்வதறியாத அங்கிருந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
Samayam Tamil kanthu vatti suicide


இதையடுத்து தீ அணைப்பு துறையினரும் அங்கு வந்து குளத்தில் மூழ்கி உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர். விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட பெண் தேவர்கண்டநல்லூரைச் சேர்ந்த ராஜகோபாலின் மனைவி கமலவேணி (35) என்று தெரிந்தது. இவர் கந்துவட்டிக்கு 5 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார்.

அந்த பணத்தை பலபேருக்கு வட்டிக்கு கடன் கொடுத்துள்ளார். ஆனால், கடன் வாங்கியவர்கள் கம்பி நீட்டியதால் கடன் நெருக்கடிக்கு ஆளான அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, கமலவேணியின் மரணத்தை சந்தேக வழக்காக பதிவு செய்துள்ள திருவாரூர் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஜிம்மிற்கு சென்ற காதல் மனைவி பாடி பில்டருடன் ஓட்டம்..! கதறும் கணவன்... மதுரை சம்பவம்

வறுமையில் இருப்பவர்கள் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர் கதையாகி வரும் நிலையில், கடன் கொடுத்தவரே கடனாளியாகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்து வட்டி நாட்டுக்கும், வீட்டுக்கும் உயிருக்கு கேடு என்ற நிலை சாமானியர்களின் மனதில் எப்போது உதயமாகிறதோ அதுவரை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்துதான் இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த செய்தி