ஆப்நகரம்

சாலையை கடக்க முயன்ற பெண் மீது அரசு பேருந்து மோதி விபத்து!

பெரியகுளம் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது அரசு பேருந்து மோதியதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 21 May 2019, 1:54 pm
பெரியகுளம் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது அரசு பேருந்து மோதியதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Samayam Tamil சாலையை கடக்க முயன்ற பெண் மீது அரசு பேருந்து மோதி விபத்து!
சாலையை கடக்க முயன்ற பெண் மீது அரசு பேருந்து மோதி விபத்து!


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசாபட்டி தேனி-திண்டுக்கல் சாலையில் நாகஜோதி என்ற பெண் இன்று சாலையை கடக்க முயன்றபோது, தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து பெண் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நாகஜோதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் தொடரும் சாலை விபத்தை தடுக்க காவல்துறையினர் சாலையில் பேரிகாடுகளை அமைத்திருந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அதை அகற்றி வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து பேரிகாடுகளை அகற்றியதால் தான் விபத்து ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இதனை தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கலைந்து செல்ல மறுத்ததால், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிபாளர் பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மக்கள் சாலைமறியலை கைவிட்டனர்.

மேலும் இந்த விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சாலை மறியலால் தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடுத்த செய்தி