ஆப்நகரம்

குழந்தைக்கு அப்பா எங்க? பதில் சொல்ல முடியாமல் பெண் மருத்துவர் தற்கொலை..! திருச்சி சோகம்

திருச்சி அருகே உறவினர்களின் கேள்வியால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார்.

Samayam Tamil 21 Sep 2021, 6:37 pm
வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் நபர்களுக்கு அறிவுரை வழங்கும் கடமை மருத்துவர்களுக்கும் உள்ளது. ஆனால், ஒரு பெண் மருத்துவரே மகனை அனாதையாக தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil sanjini


திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் கோகுல். இவர் தொட்டியம் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருக்கும் திருச்சியை சேர்ந்த மருத்துவரான சஞ்சினிக்கும் (30) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மருத்துவர் தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளான். மகப்பேறு மருத்துவரான சஞ்சினி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பேராசியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

சஞ்சினியின் தந்தையும் மருத்துவர் என்று கூறப்படுகிறது. நல்ல வசதியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிக்கு இடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். கணவர் கோகுல் தொட்டியம் பகுதிக்கு சென்றுவிட்ட நிலையில், சஞ்சினி சுப்ரமணியபுரத்தில் உள்ள தனது அப்பா வீட்டில் மகனும் வசித்து வந்தார். சஞ்சினி கணவரை பிரிந்த விஷயம் அவரது உறவினர்களுக்கு தெரியாது என்று கூறப்படுகிறது.

இதனிடையே சஞ்சினி திருச்சியில் உள்ள ஹோட்டலில் தனது மகனுக்கு காது குத்து விழா நடத்தினார். விழாவில் சஞ்சினியின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால், இந்த விழாவிற்கு கணவன் கோகுலை அழைக்காத காரணத்தால் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் விழாவிற்கு வந்த உறவினர்கள் சஞ்சினியிடன் ' உன் கணவர் எங்கே? குழந்தையின் அப்பா இல்லாமல் விழா நடக்கிறேதே? என மாறி மாறி கேள்வி கேட்டுள்ளனர்.

பொள்ளாச்சி வழக்கு: முதல்முறை நீதிமன்றத்தில் நடந்த சம்பவம்..! இன்னும் 6 மாதமே கெடு

இதனால் மன உளைச்சலுக்கு மத்தியில் விழாவை நடத்தி முடித்த சஞ்சினி மகனை அழைத்துக்கொண்டு தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மகனை தூங்கவைத்துவிட்டு படுக்கையறைக்கு சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் அறிந்து வந்த கே.கே. நகர் போலீசார் சஞ்சினியின் உடலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி