ஆப்நகரம்

ஒகேனக்கல் அருவியில் செல்பி எடுத்த பெண் பரிதாப பலி... சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

ஒகேனக்கல்லில் செல்பி எடுத்தபோது அருவியில் விழுந்து பெண் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 May 2022, 7:27 pm
மக்கள் மத்தியில் செல்பி என்ற விஷயம் பிரபலமாக தொடங்கியதில் இருந்தே பல விபரீதங்களை பார்த்து வருகிறோம். ரயிலுக்கு முன்பு செல்பி எடுத்து ரயிலில் அடிபட்டு இறப்பது, ஓடும் வெள்ளத்திற்கு நடுவே நின்று செல்பி எடுக்கும்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறப்பது மற்றும் பாறை வழுக்கி அடிபட்டு இறப்பது போன்ற பல செய்திகளை கடந்து வந்தாலும் ஒரு சிலர் இன்னமும் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து வருவதை நிறுத்தவில்லை... அந்த வகையில், ஒகேனக்கல்லில் செல்போனில் செல்பி எடுத்து அருவியில் விழுந்து பெண் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil selfie death


தருமபுரி மாவட்டம் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஒகேனக்கல். இங்கு தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியை சுற்றிப் பார்ப்பது வழக்கம். இந்த நிலையில், இன்று மாலை பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி சுமதி (வயது 35).

இவர் தொங்கு பாலம் அருகே உள்ள பாறையின் மீது ஏறி செல்பி எடுத்தபோது நிலைதடுமாறி பாறையின் மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் சடலத்தை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

நுரையீரலில் படிந்த தண்ணீர்... அறுவை சிகிச்சையின் போது நடிகை சேதனா ராஜ் மரணம்

பெண் செல்பி எடுத்து இறந்த சம்பவம் ஒகேனக்கல் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி