ஆப்நகரம்

தர்மபுரி: காவலர் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

அரூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு காவலர்கள் உள்பட 5 பேர் மீது அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 18 Dec 2019, 8:17 am
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள, ஈட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பாலசுப்பிரமணியன். இவர், தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
Samayam Tamil காவலர் மீது பாலியல் வன்கொடுமை புகார்


இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள்: கைது செய்த காவல்துறை!

இவர், அரூர் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம்பெண் ஒருவரை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

சென்னை: “அப்பா வைத்தியத்திற்கு காசு வேண்டும்” என போலி தங்கம் விற்ற பெண்!

இந்த நிலையில், காவலர் பாலசுப்பிரமணியன், காதலித்தவரை திருமணம் செய்யாமல், வேறொரு பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், காதலித்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று பாலசுப்பிரமணியனின் அக்கா ராமேஸ்வரி தடையாக இருந்துள்ளார்.

பணக்காரர்களை குறிவைத்த போலி சிபிஐ அதிகாரிகள்!

பாதிக்கப்பட்ட இளம்பெண் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், தருமபுரி ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் பெண் காவலர் ராமேஸ்வரி, அவரது கணவர் பீமராவ், காவலர் பாலசுப்பிரமணியன், அவரது பெற்றோர் ராமலிங்கம், பூங்கொடி ஆகியோர் மீது, 5 பிரிவுகளின் கீழ் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி