ஆப்நகரம்

சத்தியமங்கலம் அருகே பெண் கழுத்தறுத்து கொலை

நேற்று காலை முதல் தேவி வீடு திறக்காமல் இருந்துள்ளது. வெகுநேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னலை திறந்து பார்த்தபோது, தேவி வீட்டிற்குள் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Samayam Tamil 20 Jul 2019, 10:50 pm
சத்தியமங்கலம் அருகே பெண் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil சத்தியமங்கலம் அருகே பெண் கழுத்தறுத்து கொலை
சத்தியமங்கலம் அருகே பெண் கழுத்தறுத்து கொலை


சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் கிராமம் புதுகரடு பகுதியை சேர்ந்தவர் தேவி (45). கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் சுரேஷ்(48). இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு துளசி (35) என்ற மகளும் குமார் (25) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை முதல் தேவி வீடு திறக்காமல் இருந்துள்ளது. வெகுநேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னலை திறந்து பார்த்தபோது, தேவி வீட்டிற்குள் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நேற்று முன்தினம் இரவு கழுதறுக்கப்பட்டு தேவி கொலை செய்யப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததது. இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி