ஆப்நகரம்

கை கழுவிய காதலன், இளம்பெண் செய்த காரியம்..! திருப்பத்தூரில் சோகம்

திருப்பத்தூர் அருகே பழகி விட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலனால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Oct 2020, 8:46 pm
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பெரியவரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரத். இவரும் சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்த ஜாய்ஸ் பிரியா என்ற பெண்ணும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். ஜாய்ஸ் பிரியா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பிரிவு தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
Samayam Tamil ஜாய்ஸ் பிரியா


இந்நிலையில் காதலர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பரத் ஜாய்ஸ் பிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்து வந்த ஜாய்ஸ் பிரியா சம்பவம் அன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிலிருந்தவர்கள் உடனே ஆம்பூர் காவல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஜாய்ஸ் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நான்கு வருடங்களாக ஜாய்ஸ் பிரியாவை காதலித்து விட்டு கை கழுவ நினைத்த பரத் மீது பெண்ணின் வீட்டார் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் பரத்தை விசாரிக்க முயன்றனர்.

மருமகள் வயிற்றில் மாமனார் குழந்தையா? ஒரே அடி பிரிந்த உயிர்...

ஆனால், பரத் தலைமறைவாகியுள்ளார். தொடர்ந்து தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள பரத்தை தேடி வருகின்றனர். ஜாய்ஸ் பிரியாவின் மரணத்துக்கு உண்மையில் பரத் காரணமா அல்லது வேறேதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி