ஆப்நகரம்

பெண்ணின் வாயில் டேப்பை கட்டி கொள்ளையர்கள் சிலுமிஷம்..! சென்னையில் அட்டூழியம்...

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் பொருட்களை சேதப்படுத்தி, காவலாளியை தாக்கிவிட்டு சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Jul 2020, 2:00 pm
சென்னையில் பிரபல விளம்பர தயாரிப்பாளரான வைஜேந்தி என்பவருக்கு சொந்தமான சொகுசு பங்களா ஒன்று மாமல்லபுரத்தில் உள்ளது. அந்த வீட்டை பார்த்துக்கொள்ள காவலாளி ராஜேந்திரன் என்பவர் தந்து குடும்பத்துடன் அதே வளாகத்தில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.
Samayam Tamil woman harassed by thieves


இந்நிலையில் சம்பவத்தன்று கொள்ளை அடிக்க வந்த மர்ம கும்பல் ஒன்று ராஜேந்திரனையும் அவரது குழந்தை, மாமனார், மனைவி ஆகியோரை மிரட்டி கை மற்றும் வாயை டேப்பினால் கட்டி ஒரு அறையில் அடைத்துள்ளனர். அப்போது ராஜேந்திரனும் அவரது மாமனாரும் பலமாக கத்தியால் தாக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து, ராஜேந்திரனின் மனைவியை மட்டும் வீட்டு அறைகளை திறந்துகாட்ட சொல்லி அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், எந்த அறையிலும் நகை, பணம் போன்றவை இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் ஆத்திரத்தில் பொருட்களை உடைத்துள்ளனர். மேலும், காவலாளியின் மனைவியின் ஆடையை கிழித்து வெளியில் செல்லாதவாறு அலங்கோலப் படுத்தியுள்ளனர்.

அந்த சமயத்தில், பால் காரரின் சத்தம் கேட்டதும் வீட்டிலிருந்து ஓடி வந்த அந்த பெண், கொள்ளையர்களை காட்டி கொடுத்துள்ளார். உடனே பால்காரர் அப்பகுதியில் இருந்த சிலரின் உதவியுடன் கொள்ளையர்களை துரத்தி பிடிக்க முயர்ந்துள்ளார்.

கடத்தப்படும் குழந்தை, சீறி வந்த தாய்..! தாய்மாமன் சதி திட்டம்...

அதற்குள், வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை உடைத்து சேதப்படுத்திய கொள்ளையர்களை, வீடியோக்களை சேமித்து வைத்துக்கொள்ளும் ஹார்டுடிஸ்க்கையும் திருடி தப்பியுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மாமல்லபுரம் போலீசார், கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி