ஆப்நகரம்

அதிகாலை வீட்டில் எறிந்த விளக்கு, தாயின் செயலை நேரில் பார்த்த மகன்..! நாகையில் படுகொலை

நாகை அருகே வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்த இருந்த பெண் கணவனால் படுகொலை செய்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Aug 2020, 8:00 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் ராமு என்கிற ராமதாஸ் (49). இவரது மனைவி நீலாவதி (49). இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நீலாவதியின் நடத்தையின் சந்தேகப்பட்ட ராமதாஸ் அவருடன் சண்டையிட்டு மகனுடன் வேறொரு வீட்டுக்கு குடியேறினார். இதையடுத்து நீலாவதி மட்டும் வசந்தம் நகரில் தனியாக வசித்து வந்தார்.
Samayam Tamil file pic


சில நாட்களுக்கு முன்பு நீலாவதியின் மகன் இரவு வேலை பார்த்துவிட்டு அதிகாலை வீட்டை நோக்கி வந்துள்ளார். அப்போது, தாய் நீலாவதியின் வீட்டில் விளக்கு எறிந்ததை கவனித்ததும் வீட்டருகே சென்று பார்த்துள்ளார். அப்போது , நீலாவதி வேறொரு இளைஞருடன் நெருக்கமாக இருப்பதைக்கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

இதனால் மன வெறுப்பில் இருந்த மகன், ராமதாஸிடம் இதுகுறித்து அழுததாக கூறப்படுகிறது. மகனை சமாதானப்படுத்த முடியாமல் தவித்த ராமதாஸ், நீலாவதியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

கேரள தங்கக் கடத்தல் மர்மம் என்ன? துபாயில் என்ஐஏ முகாம்!

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ராமதாஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தாயும் தடம் மாறி சென்று கொலை செய்யப்பட, தந்தையும் சிறைக்கு சென்றுள்ள சூழலில் மகன் மட்டும் தனிமையில் இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையம் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி