ஆப்நகரம்

சும்மாவே இருக்கறது இல்ல, கணவனை கொலை செய்த மனைவி..!

திருவண்ணாமலை அருகே கணவன் குடித்துவிட்டு தினமும் தகராறில் ஈடுபட்டு வந்ததால் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 1 Nov 2020, 9:18 pm
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஆறுமுகம் (40), ஈஸ்வரி (35). இவர்களுக்கு 18 மற்றும் 16 வயதில் இரு மகன்கள் உள்ளனர். ஆறுமுகம் அப்பகுதியில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இரவு காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
Samayam Tamil கணவனை கொன்ற மனைவி


இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஏரியில் ஆறுமுகம் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆறுமுகத்தின் சடலத்தை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது, ஆறுமுகத்தின் மனைவி ஈஸ்வரி மீது சந்தேகம் எழவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவனை கொலை செய்து நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை அளித்தது.

அருகருகே தூக்கில் தொங்கிய காதல் ஜோடி..! திருச்சியில் பரபரப்பு

ஈஸ்வரி அளித்த வாக்குமூலம், '' என் கணவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். அந்த போதையில், என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடிப்பது வழக்கம். மேலும், எனது நடத்தையில் சந்தகமடைந்து தினமும் அவதூறாக பேசி வந்தார். தினமும் குடித்துவிட்டு சண்டை போடுவது மட்டுமில்லாமல், வீட்டு செலவுக்கு பணமும் கொடுக்கமாட்டார்.

அதனால், சம்பவத்தன்று அவர் குடிக்கவிருந்த மதுவில் தூக்க மாத்திரைகளை கலந்துவிட்டேன். அன்று இரவு பணியில் இருந்தபோது அவர் மயங்கினர். பின்னர் அவரை கைத்தாங்களாக ஏரி பகுதிக்கு அழைத்து சென்று தலையில் கல்லை போட்டு சாகடிக்க முயற்சித்தேன். ஆனாலும் உயிர் பிரியாததால், கழுத்தை நெரித்து கொலை செய்தேன்'' என இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி