ஆப்நகரம்

போதையில் டார்ச்சர் செய்த கணவன்... அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற மனைவி கைது!

ஆவடி அருகே போதையில் தொல்லை கொடுத்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 27 Jun 2022, 2:56 pm
விழுப்புரம் மாவட்டம், கெடார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (37). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அத்தை மகளான விஜயலட்சுமி (27) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர்.
Samayam Tamil husband and wife


இந்த நிலையில், ஆவடி, முத்தாப்புதுப்பேட்டை, தும்பூர் கிராமத்தில் உள்ள டைமன் செங்கல் சூளையில், தங்கியிருந்து, கிருஷ்ணன், விஜயலட்சுமி ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். தினமும் மது குடித்துவிட்டு வரும் கிருஷ்ணன், விஜயலட்சுமியை அடித்து உதைப்பாராம்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவில், மதுப்போதையில் வந்த கிருஷ்ணன், விஜயலட்சுமியை டார்ச்சர் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி அம்மிக்கல்லை எடுத்து, கிருஷ்ணன் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த செங்கல் சூளை ஊழியர் ஜெயபால், முத்தாப்புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தந்தார்.

போலீசார், சம்பவம் இடத்துக்கு வந்து, கிருஷ்ணன் உடலை கைப்பற்றி , பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜயலட்சுமி மீது கொலை வழக்கை பதிவு செய்து கைது செய்தனர்.

அடுத்த செய்தி