ஆப்நகரம்

'மாமனாரால் மருமகள் கர்ப்பம்', சித்திரவதை தாங்காமல் பெண் எடுத்த முடிவு..!

குஜராத் அருகே மருமகள், மாமனார் உறவில் சந்தேகித்த மாமியார் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Nov 2020, 2:43 pm
குஜராத் மாநிலம் அகமதாபத்தைச் சேர்த்தவர் தீபக் (30). இவரது மனைவி நிகிதா அகர்வால். இவர்கள் மற்றும் தீபக்கின் தந்தை ராம்னிவாஸ், தாய் ரேகா அகர்வால் நான்கு பேரும் ஒரே அபார்ட்மெண்டில் வசித்து வருகின்றனர். தீபக் தனது தந்தையுடன் கிரைனைட் தொழிலை செய்து வருகிறார்.
Samayam Tamil nikitha agarwal


இந்த நிலையில், நிகிதா அகர்வால் கர்ப்பம் தரித்துள்ளார். திருமணமான நாளில் இருந்து நிகிதாவுக்கும், மாமியார் ரேகாவுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இருவரது கணவர்களும் பிசினஸை கவனிக்க வெளியில் சென்றுவிடும் நேரங்களில் வீட்டினுள் இருவரும் எலியும், பூனையுமாக இருந்து வந்துள்ளனர்.


வீட்டில் அடிக்கடி கூச்சல் இருந்து வந்ததால், மாமியார் மருமகள் விவகாரம் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் தெரியும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தீபக்கின் தந்தை ராம் நிவாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்த அன்று தந்தையை காண தீபக் மருத்துவமனைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் மாமியார், மருமகள் இருவரும் இருந்துள்ளனர். அன்றும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

சசிகலா பயன்படுத்தப்போகும் பிரம்மாஸ்திரம்!

மாமியார் ரேகா

அப்போது நிகிதாவின் நடத்தையை சந்தகித்த ரேகா, நிகிதா கர்ப்பமடைய தன்னுடைய கணவர்தான் காரணம். ஆள் இல்லாத நேரத்தில் மாமனாருடன் தகாத உறவை வைத்து வருகிறாய் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிகிதா, வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து வந்து மாமியாரின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

தாயை வெளியே தள்ளிவிட்டு, சிறுமியுடன் உள்ளே வாலிபர்..! சிதம்பரத்தில் பரபரப்பு

இதனால் ஏற்பட்ட சத்தத்தினால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், தீபக்கை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர். உடனே வீட்டிற்கு வந்த தீபக், வாயில் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது, தாய் ரேகா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ந்து போனார். அப்போது நிகிதா வேறொரு அறையில் சென்று கதவை சாத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த
சோலா உயர் நீதிமன்ற காவல் நிலைய போலீசார் நிகிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி