ஆப்நகரம்

கணவனை விட்டுவிட்டு வாலிபருடன் கள்ளக்காதல்.! இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..

ஆம்பூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Sep 2019, 8:05 pm
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குப்பம் ரயில்வே தண்டவாளத்தின் அருகில் கடந்த மாதம் இளம்பெண் சடலமாகக் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆம்பூர் ரயில்வே காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீஸ் ஆம்பூர் காவல் நிலையத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
Samayam Tamil Untitled (1)


தகவல் கிடைத்தும் காவல் நிலைய போலீசார் தாமதமாகவே வந்துள்ளனர். இந்நிலையில் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் துணியால் கழுத்து இறுக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவத்தைக் குறித்து விசாரித்ததில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சிவரத்தினம் என்று தெரியவந்துள்ளது. இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏழுமலை என்ற வாலிபருக்கு சிவரத்தினத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சிவரத்தினத்துக்கு ஏற்கெனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் திருமணமாகி கருத்து வேறுபாட்டினால் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 13 வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த சமயத்தில் தன்னுடன் வேலை செய்து வரும் ஏழுமலையுடன் நெருக்கமாகியுள்ளார். ஏழுமலையுடன் தீவிரமாக இருந்த வந்த சிவரத்தினம் அவருக்கு விலையுயர்ந்த செல்போனை வாங்கிக்கொடுத்துள்ளார்.

இதற்கு பிறகு அவர்களுக்குள் என்ன நடந்தது என்பதைப் போலீசிடம் சிக்கிய ஏழுமலை அளித்த வாக்குமூலம் பின்வருமாறு, ''சிவரத்தினமும் நானும் நீண்ட நாட்களாகக் கணவன் மனைவி போல் இருந்து வந்தோம். ஆனால் சில மாதங்களாக நான் அவருடன் பேசவில்லை. இதனால் எனக்கு அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி அவரை சந்திப்பதாக சொல்லி திருவண்ணாமலைக்கு அழைத்தேன். அங்கு வந்த சீவரத்தினத்தை எனது பைக்கில் அழைத்துக்கொண்டு ஆம்பூர் பச்சக்குப்பம் மேம்பாலத்திற்குச் சென்றதாகவும் பின்பு அங்கிருந்த முட்புதருக்கு அருகே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் ஏற்பட்ட ஆத்திரத்தால் சீவரத்தினத்தைக் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் ஏழுமலை தனது வாக்குமூலத்தில் கூறினார். இதன் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி