ஆப்நகரம்

இரு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை!

குடும்ப தகராறில் மனமுடைந்த தாய் இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்த சம்பவம் வேகாமங்கலம் கிராமத்த்தில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 15 Jun 2019, 8:36 am
காவேரிப்பாக்கம் அருகே குடும்ப தகராறில் மனமுடைந்த தாய் இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil இரு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை!
இரு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை!


வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே வேகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தமபதியினர் சங்கர் - நித்யா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளான நிலையில் அஸ்வினி(7) என்ற மகளும், தனுஷ்(4) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சங்கர் சென்னையில் கேட்டரிங் வேலைபார்த்து வருவதால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக சென்னை சென்ற நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த நித்யா தனது மகள் அஸ்வினிக்கும் மகன் தனுஷுக்கும் விஷத்தை கொடுத்து விட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தைகளை கொலை செய்து, தாயும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி