ஆப்நகரம்

இதுவும் பெண் குழந்தையா..? கணவன் திட்டியதால் சிசுவை செடியில் வீசிய தாய்..!

திருச்சியில் கணவன் திட்டியதால் குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்ற பெண்

Samayam Tamil 27 Jan 2022, 6:12 pm
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று செடிகளுக்கிடையே இருந்து, பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை கட்டிட பணியாளர்களால் மீட்கப்பட்டது.
Samayam Tamil dhanalakshmi
dhanalakshmi


இதுகுறித்து மணப்பாறை போலீஸார் விசாரணை மேற்கோண்டு வந்த நிலையில், இன்று காலை மருங்காபுரி வட்டம் அம்மா சத்திரம் புதூரை சேர்ந்த தனலெட்சுமி என்பவர் மணப்பாறை காவல் நிலையத்திற்கு வந்து மருத்துவமனை வளாகத்தில் கிடந்த குழந்தை தன்னுடையதுதான் என கூறினார்.

மேலும், தனது கணவர் தமிழரசன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், குழந்தை கடந்த 18-ஆம் தேதி திருச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்ததாகவும், முதல் இரண்டு குழந்தைகள் பெண் குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் மூன்றாவதாக தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் கணவர் திட்டியதால் வேதனையில் மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்றதாகவும் கூறினார். மேலும் சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் வந்து பார்த்தபோது குழந்தை அங்கு இல்லை என்றும் கூறினார்.

வெளிநாட்டில் கணவன்... வீடியோ கால் பழக்கத்தால் கதறி உயிரைவிட்ட பெண்..! திருச்சி சோகம்

குழந்தை தற்ப்போது திருச்சி குழந்தைகள் நல குழுவில் ஒப்படைக்கப்பட்டதால் அங்கு செல்லுமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி