ஆப்நகரம்

உ.பி அதிர்ச்சி! தனியார் பேருந்தில் பெண் பயணி பலாத்காரம், கிளீனரின் அட்டூழியம்

உத்தரப் பிரதேசத்தில் வீட்டுக்கு செல்வதற்காக தனியார் பேருந்தில் பயணித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Samayam Tamil 2 Sep 2020, 4:31 pm
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை அன்று தனியார் பேருந்தில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து யமுனா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த பேருந்தின் கிளீனராக உள்ள ரவி என்பவர் அப்பெண்ணை ஆபாசமாக பேசி சீண்டியுள்ளார்.
Samayam Tamil file pic


அதனால் கோபமடைந்த பெண், ரவியை கடிந்ததாக கூறப்படுகிறது.அதையடுத்து, ஆள் இல்லாத பேருந்து, டிரைவரின் ஆதரவு என தனக்கு சாதகமான சூழலில் ரவி அந்த பெண் பயணியை பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் பேருந்து லக்னோ அருகே வந்தபோது, பலாத்காரம் செய்யப்பட்ட பெண் 112 என்ற உதவி என்னை தொடர்பு கொண்டு நடந்தவற்றை போலீசுக்கு தெரிவிக்கவே, விரைந்த வந்த போலீசார் பேருந்தை மதுரா டோல் பிளாசாவில் வைத்து மடக்கியுள்ளனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணையும், கிளீனர் ரவியையும் கீழே இறங்க சொல்லிவிட்டு, பேருந்துக்குள் சென்று ஒரு சிலர் காவலர்கள் சோதனையிட்டனர். அதையடுத்து, பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவியை கைது செய்த போலீசார், புகார் கொடுத்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். மருத்துவ அறிக்கைகளை சேகரித்துவரும் போலீசார், கிளீனர் ரவியை கஸ்டடியில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர்: 10 பேர் தாக்குதலில் நிலைகுலைந்து உயிரை விட்ட வாலிபர், கதறும் தாய்!

டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பரில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு மரணித்த மாணவி நிர்பயாவின் வழக்கு இன்னமும் பெண்கள் மீதான வன்கொடுமைகளின் உட்சபட்ச எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அதே மாநிலத்தில் மற்றொரு பெண்ணை தனியார் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் வடக்கில் குறையாத அட்டூழியங்களை நினைவூட்டியுள்ளது.

அடுத்த செய்தி