ஆப்நகரம்

நாகப் பாம்புகளை வைத்து இப்படியொரு அதிர்ச்சி - அருள்வாக்கு அம்மன் கைது!

வாடகை பாம்பை வைத்து வித்தை காட்டி வந்த அருள்வாக்கு அம்மனை வனத்துறை கைது செய்துள்ளது.

Samayam Tamil 22 Dec 2019, 9:02 am
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் வசித்து வருபவர் கபிலா அம்மையார். இவர் பாம்பை கழுத்தில் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு வட பத்திரகாளியம்மன் அருள் வாக்கு சொல்லி வருவதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
Samayam Tamil Arrest


இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பிரபலமடைந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலானது. எப்போதும் கையில் சூலத்துடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ஏடிஎம் பணத்தை வாகனத்தோடு திருடிச் சென்ற ஊழியர்...

சமீபத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேகத்தின் போது 2 நாகப் பாம்புகளை வாடகைக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு மலர் தூவி பூஜைகள் செய்துள்ளார். அபிஷேகம் என்ற பெயரில் பாலை பாம்பின் மீது ஊற்றியுள்ளார்.

இதில் அந்த பாம்பு பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. இதையடுத்து கோயிலில் இருந்த சிலைகளின் மீது பாம்பை விட்டு பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பின்னர் தனது கழுத்தில் பாம்புகளை சுழல விட்டு அம்மன் போல காட்சி தந்திருக்கிறார்.

திருவள்ளூரில் பரபரப்பு, குண்டு வீசி 2வர் கொலை!

இதுதொடர்பான காட்சிகளை வீடியோவாக யு-டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். இதன் விளைவாக ஊடகங்களின் பார்வை கபிலா அம்மையார் மீது திரும்பியது. அதேசமயம் பாம்புகளை வைத்து வித்தை காட்டிய காட்சிகளை வனத்துறையினரும் கண்டனர்.

பாம்புகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்தது, பாம்புகளை வைத்து வித்தை காட்டியது பற்றி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அம்மன் என்னிடம் சொன்னார். அதனால் பாம்புகளுக்கு பூஜை செய்து வருகிறேன்.

சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

அம்மன் அருள் எனக்கு வந்துள்ளது. அதனால் தான் பாம்புகள் எனது கழுத்தில் சுற்றிக் கொண்டன என்று கபிலா அம்மையார் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெண் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன்படி கபிலாவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் வாலாஜாபாத் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி