ஆப்நகரம்

விபச்சாரத்தில் மனைவி... கள்ளகாதலியுடன் கணவன்... நடந்தது கொலை..! விறுவிறுப்பான க்ரைம் சீன்

ஸ்ரீபெரும்புதூர் அருகே 23 வயதான பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவனும், கள்ளகாதலியும் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 28 Apr 2022, 7:31 pm
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தெரசாபுரம் கிராம காலி நிலத்தில் கடந்த 18 ஆம் தேதி ராணிபேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தைச் சேர்ந்த பிரியா (23) என்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், பிரியா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார், தீவிரமாக விசாரித்து, பிரியாவின் கணவர் நவீன், அவரது கள்ளக்காதலி கல்பனா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil கள்ளகாதலியுடன் சேர்ந்து மனைவி கொலை
கள்ளகாதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன்


இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு போலீசார் கூறியதாவது;

23 வயதான பிரியா, காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையைச் சேர்ந்த நவீன், 25, என்பவரை கடந்த மூன்று ஆண்டுகள் முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துள்ளது. இதையடுத்து நவீனுக்கு, கல்பனா (34) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, தனியாக சென்றுள்ளார். ஆதரவின்றி வாழ்ந்த பிரியா, பெண் இடைதரகர் மூலம் விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேட்டர முடிச்சிட்டு கத்தி காட்டிய கும்பல்... சென்னையில் கதறிய மும்பை அழகி...

நவீனை, பொது இடங்களில் பார்க்கும்போதெல்லாம் அவமதிக்கவும் செய்துள்ளார். மேலும், கல்பனா, அவரது தம்பி காளிதாஸ் ஆகியோர், காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பது குறித்து, போலீசாருக்கு பிரியா தகவல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கல்பனா, காளிதாஸ் கைதாகி சிறைக்கு சென்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த கல்பனா, நவீனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு, பிரியாவை காஞ்சிபுரத்திற்கு வரவழைத்தனர். பின்னர் மூவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிரியாவுக்கு போதை அதிகமானதும் நவீனும், கல்பனாவும் சேர்ந்து பிரியாவை அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி