ஆப்நகரம்

இன்னும் தீராத அந்தப் பிரச்சினை; அதுவும் போனில் இப்படி சொன்னால் சும்மா விடுவார்களா?

இளம்பெண்ணிற்கு அவரது கணவர் போனில் இப்படி சொன்ன நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Samayam Tamil 20 Mar 2020, 10:22 am
இஸ்லாமிய பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கருதி முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை ரத்து செய்யப்பட்டது. அதையும் மீறி தலாக் கூறினால் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இது பாலின சமத்துவத்துக்கு நீதி கிடைக்கச் செய்யும் என்று பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.
Samayam Tamil முத்தலாக் விவகாரம்


இருப்பினும் முத்தலாக் பிரச்சினைகள் முடிவுக்கு வந்தபாடில்லை. குஜராத் மாநிலம் ஜூஹாபுரா பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண் வேஜால்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் போன் மூலம் முத்தலாக் கூறி விவகாரத்து கேட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். தனது மகன் கருப்பாக இருப்பதை அந்த நபர் குறையாக கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மேஹ்சானாவை சேர்ந்த நபருக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக அப்பெண் கூறியுள்ளார்.

அதன்பிறகு வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளனர். முன்பொரு சமயம் தனது கணவர் உள்ளூரில் ரவுடியாக வலம் வந்திருப்பதாகவும், அடிக்கடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மனைவியை கொன்ற கணவர் போலீஸில் சரண்..! கிடுங்க வைத்த காரணம்...

ஒவ்வொரு முறை கணவரின் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு மறுப்பு தெரிவித்த போதும், கடுமையாக தாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அந்த குழந்தை கருப்பாக இருந்ததாகவும், அழகாக இல்லை என்றும் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி