ஆப்நகரம்

திருவண்ணாமலை: பக்கா பிளான் போட்டு 80 சவரன் நகைகளை கொள்ளையடித்த பெண்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மண்மலை எனும் பகுதியில் தனியாக வீட்டிலிருந்த மூதாட்டியை ஏமாற்றி பெண் ஒருவர் 80 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

Samayam Tamil 25 Oct 2019, 3:58 pm
திருட்டுச் செயலில் ஈடுபடுவதில் ஆண், பெண் பேதம் எல்லாம் இல்லை. இப்படியான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனி பாணியை அமைத்துக்கொள்கின்றனர்.
Samayam Tamil Untitled collage (5)


சாலையில் தனியாகச் செல்லும் முதியவர்கள், வீட்டில் தனிமையில் இருக்கும் முதியவர்களை இதுபோன்ற திருட்டுக்கும்பல்கள் குறிவைக்கின்றன. சில நேரங்களில் இவர்களிடமிருந்து பணம், நகையை பறிக்க கொலை வரை இறங்கவும் செய்கின்றனர்.

நிறை மாத கர்ப்பிணியை கொன்ற கணவன்: திண்டுக்கல்லில் நிகழ்ந்த கொடூர சம்பவம் எதற்காக தெரியுமா?

செங்கம் அருகேயுள்ள மண்மலையில் சேகர் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆசிரியராக பணியாற்ற அவரது மனைவி மகேஸ்வரி செவிலியராக பணியாற்றுகிறார். இருவரும் வேலைக்குச் சென்றுவிட சேகரின் தாயார் பகலில் தனியாக வீட்டில் இருப்பார். இதை அறிந்துகொண்ட பெண் ஒருவர் பச்சையம்மாளிடம் உறவுக்கார பெண் போல பேச்சுகொடுத்துள்ளார்.

பேச்சின் இடையே உங்கள் மருமகள் கேஸ் வாங்கிவைக்கச் சொன்னதாகக் கூறி பீரோ சாவியை கேட்டுள்ளார். பச்சையம்மாளும் சாவியை கொடுக்க, பீரோவிலிருந்து 80 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

உயிரைக் குடித்த வாட்ஸப் மெசேஜ்: நடிகை கணவர் மரணத்தின் பகீர் பின்னணி!

வேலை முடிந்து வீடு திரும்பிய மருமகள் மகேஸ்வரி நகைகள் கொள்ளையடிக்கப்ப்பட்டது அறிந்து செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் மூதாட்டியை ஏமாற்றி கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை தேடிவருகின்றனர்.

அடுத்த செய்தி