ஆப்நகரம்

மயங்கிய கணவனை இறந்ததாக கருதி பெட்ரோல் ஊற்றி எரித்த பெண்..! சேலம் பரபரப்பு

சேலம் அருகே மயங்கி விழுந்த கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Sep 2020, 4:22 pm
சேலம் மாவட்டம் வீரகனுர் பஞ்சாயத்துக்குட்பட்ட வெள்ளையூரைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் கட்டிடவேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், பழிக்கு செல்லும் வயதில் ஒருமகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில், சகுந்தலாவுக்கும் ஆனையம்பட்டியை சேர்ந்த அந்தோணி என்பவருக்கும் இடையே திருமண உறவை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil extra marital affairs


கட்டிட வேலைக்காக சின்னசாமி சென்றுவிடும் நேரங்களில், இருவரும் தனிமையில் சந்தித்து, உல்லாச ஜோடிகளாக இருந்து வந்துள்ளனர். கட்டியது ஒருவர், காதலிப்பது ஒருவர் என சந்தோஷமாக இருந்து வந்த சகுந்தலாவின் செயல் சின்னசாமிக்கு தெரிய வந்துள்ளது. அதை சின்னசாமி கண்டித்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சகுந்தலா ஆத்திரமடைந்து அவரை தாக்கியுள்ளார்.

5 நிமிடங்களில் நடந்த கொடூரம்..! நெல்லை பெண்கள் கொலையில் பகீர் பின்னணி!

இதனால் சின்னசாமி சுயநினைவின்றி விழுந்துள்ளார். கணவன் இறந்துவிட்டதாக கருதிய சகுந்தலா, வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து சின்னசாமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அதன்பின்னர் உடல்முழுவதும் எரிந்து உயிரிழந்த சின்னசாமியின் உடல் அப்பகுதியில் இருந்த ரேஷன் கடைக்கு முன் கிடந்துள்ளது.

தொடக்கத்தில் தற்கொலை என சந்தேகித்த போலீசார், சகுந்தலாவை விசாரித்தபோது முழு விவரம் தெரிய வந்தது. இதையடுத்து கொலை வழக்கை பதிவு செய்துள்ள போலீசார் சகுந்தலாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அடுத்த செய்தி