ஆப்நகரம்

சென்னை பயங்கரம் - மருமகளும், தாயும் சேர்ந்து மாமனாரை செஞ்ச காரியத்தைப் பாருங்க!

மருமகளும், அவரது தாயாரும் சேர்ந்து மாமனாருக்கு கொடூர செயலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TIMESOFINDIA.COM 10 May 2019, 3:52 pm
சென்னையின் மேற்கே உள்ள திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி(65). இவரது மகன் பிரபாகரன், 6 ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரியை(36) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
Samayam Tamil Chennai Murder


இரு ஆண்டுகளுக்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் காயத்ரி தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி, பிரபாகரன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து காயத்ரி மற்றும் அவரது தாய் கலைவாணி(57) ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. உடனே பிரபாகரன் இல்லத்திற்கு சென்றனர். அப்போது சபாபதி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து சபாபதியிடம் இருவரும் வாக்குவாதம் செய்தனர்.

இந்நிலையில் அவர்களில் ஒருவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து, சபாபதி மீது ஊற்றியுள்ளார். காயத்ரி தீப்பற்ற வைத்துள்ளார். இதையடுத்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர். சபாபதியின் அழுகுரலை கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அவர் இறக்கும் தருவாயில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காயத்ரி மற்றும் கலைவாணியை போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி