ஆப்நகரம்

மனைவி பிரியாணி கேட்டதால் சண்டை, தீ குளித்து இளம்பெண் தற்கொலை...

சென்னை அருகே கணவன் பிரியாணி வாங்கி கொடுக்காததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளம்பெண் தீ குளித்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.

Samayam Tamil 26 Jun 2020, 3:07 pm
மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சௌமியா. இவர்கள் இரண்டு குழந்தைகளுடன் அப்பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக மனோகரனுக்கு வேலை இல்லாததால், குடும்பத்தை சிரமத்துடன் நடத்திவந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மனோகருடைய வீட்டு உரிமையாளர், பிரியாணி வாங்கிவரும்படி கையில் பணம் கொடுத்து மனோகரை அனுப்பியுள்ளார்.
Samayam Tamil woman commits suicide for biriyani


அப்போது, தனக்கும் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கி வருமாறு சௌமியா கேட்டுள்ளார். ஆனால், கையில் பணம் இல்லாததால் மனோகர் பிரியாணி வாங்கி வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், சௌமியா கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனோகர் சௌமியாவை கடுமையாக திட்டியுள்ளார்.

இந்நிலையில், பைக்கிற்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்ற சௌமியா, அதை தந்த உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து, உடலில் என்பது சதவீதம் தீ காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சௌமியா அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மனைவியுடன் இருந்த காதலன்... கதவை திறந்து பார்த்த கணவன்... நேர்ந்த அதிர்ச்சி!

இறப்பதற்கு முன்பு சௌமியா, '' ஏதோ ஆத்திரத்தில் இப்படி செய்து விட்டேன். நான் சென்ற பிறகு என் குடும்பம் தவிக்கப்போகிறது '' என தந்து உறவினர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பிரியாணி கிடைக்காத ஆத்திரத்தால் இளம்பெண் எடுத்துள்ள இந்த முடிவு அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி