ஆப்நகரம்

நோ சொன்ன கள்ளக்காதலி... நண்பனின் மனைவி என்றும் பாராமல் துணிகரம்..!

காட்பாடி அருகே தகாத உறவால் நடு ரோட்டில் பெண்ணை கத்தியால் குத்திய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 11 Dec 2022, 5:25 pm
வேலூர் மாவட்டம் காட்பாடி கிளித்தான் பட்டறையை சேர்ந்தவர் திலகா. இவருக்கு 28 வயதாகிறது. இவர் காந்தி நகரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். திலகாவின் கணவர் ராஜேஷ் அவரது நண்பரான காட்பாடி எல்.ஜி.புதூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் இருவரும் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகின்றனர்.
Samayam Tamil vellore crime


சந்தோஷுக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வேலை சம்பந்தமாக நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி சந்தோஷ் சென்று வந்த போது நண்பரின் மனைவிக்கும் சந்தோஷுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நாளடவையில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொள்வார்களாம்.

இது பற்றி கணவனுக்கு தெரியவந்ததும் மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து, கடந்த 15 நாட்களுக்கு முன்பு திலகாவை தேடிச்சென்ற சந்தோஷை ராஜேஷ் கண்டித்த திலகா, இனிமேல் இந்த பக்கம் வர வேண்டாம் உன் வாழ்க்கையை பார்த்துக் கொள் என்று கூறியுள்ளார். இதனால் திலகா மீது சந்தோஷ் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், திலகா மாலை பணி முடிந்து காட்பாடி காந்திநகர் பகுதியில் வீட்டிற்கு திரும்ப பேருந்து நிறுத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்பொழுது அவரை வழிமறித்த சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நடு தலையிலையும், வலது புறம் காதின் மேல் உள்ள தலைப்பகுதியிலும், வெட்டி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த திலகா அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் திரண்டனர்.

உடனே சந்தோஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், உடனடியாக திலகாவை மீட்ட பொதுமக்கள் அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விரத்தம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி