ஆப்நகரம்

குழந்தை இல்லை... மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்...

குடும்ப சண்டையில் கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து கம்மாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 25 Jun 2022, 7:24 pm
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (25). இவர் தொடக்கப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் நாகராஜன் (32) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
Samayam Tamil cuddalore


இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது. இன்று அதேபோல இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் நாகரராஜன் மனைவியை கத்தியால் தலை, பின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கொடூரமாக கொலை செய்து கம்மாபுரம் காவல் நிலையத்தில் நாகராஜன் கத்தியுடன் சரண் அடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ராஜலட்சுமியின் உடலை கம்மாபுரம் காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி