ஆப்நகரம்

குடும்ப பிரச்சனை காரணமாக தாய் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை!

பேர்ணாம்பட்டு அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தாய் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 May 2019, 5:51 pm
பேர்ணாம்பட்டு அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தாய் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil குடும்ப பிரச்சனை காரணமாக தாய் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை!
குடும்ப பிரச்சனை காரணமாக தாய் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை!


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரூபினி (26). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரித்து தனது 4 வயது குழந்தை முகேஷுடன் வசித்து வந்தார். ஆனால் மீண்டும் குடும்பத்தின் பிரச்சனை ஏற்பட்டதால் ரூபிணி மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் ரூபிணி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குழந்தை முகேஷை வீசி கொலை செய்துவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடலையும் மீட்க முயன்றனர்.

ஆனால் கிணறு முழுவதும் தோல் தொழிற்சாலை கழிவுகள் இருந்ததால் அதனை மோட்டார் மூலம் வெளியேற்றி, பின்னர் கிணற்றில் இறங்கி நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தாய் ரூபினியின் உடலை மீட்டனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினரும், பொதுமக்களும் பலமணி நேரம் தேடி குழந்தை முகேஷின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து பேரணாம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனையால் குழந்தையை கிணற்றில் வீசி தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி