ஆப்நகரம்

வெறும் தரையில் ரத்தம் தெறிக்க நடந்த பிரசவம்- அரசு மருத்துவமனையின் உச்சக்கட்ட அலட்சியம்!

அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், பிரசவத்தை தரையில் அரங்கேற்றிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 20 Aug 2019, 3:12 pm
உத்தரப்பிரதேச மாநிலம் பருகாபாத் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மிகப்பெரிய அவலம் நடந்துள்ளது. கடந்த ஞாயிறு மாலை பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
Samayam Tamil Baby Delivery


அவருக்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை என்று கூறி மருத்துவர்களும், நர்ஸ்களும் மருத்துவமனை வளாகத்தில் அமர வைத்துள்ளனர். இதையடுத்து அப்பெண்ணிற்கு வெறும் தரையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

Also Read: இரு பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபருக்கு அக்கா மகளின் மீது ஆசை: என்ன நடந்தது?

இந்த காட்சிகளை தனது மொபைலில் படம்பிடித்த ஒருவர், அந்த ஊரில் உள்ள செய்தியாளரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

அதில் பெண் ஒருவர் தரையில் படுத்து கிடக்கிறார். அவருக்கு அருகில் பிரவசத்தின் போது வெளிப்பட்ட ரத்தம் சிதறிக் கிடக்கிறது. அப்பெண்ணிற்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது. அதனை அவரது உறவினர்கள் கைகளில் ஏந்தி நிற்கின்றனர்.

Also Read: அவ என்னை ஏமாத்திட்டா! காதலிக்காக தற்கொலைக்கு முயன்ற காதலன் கண்ணீர்!

சிலர் அந்த ரத்தத்தை துடைக்கும் செயலில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு அப்பெண்ணை பிரசவ அறைக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட மேஜிஸ்டிரேட் தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற விஷயங்களை ஏற்க இயலாது என்றும், உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Also Read: பேத்திக்கு ஏண்டா போன் பண்ணி டார்ச்சர் பண்றே?- தாத்தாவை கொடூரமாக கொன்ற இளைஞர்கள்!

இதே மருத்துவமனையில் கடந்த 2017ஆம் ஆண்டு, ஆக்சிஜன் பற்றாக்குறையால் 49 குழந்தைகள் ஒரே மாதத்தில் உயிரிழந்துபோனது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி