ஆப்நகரம்

கலெக்டரிடம் இருந்து வந்த உத்தரவு: இரண்டு பெண்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 2 பெண் சாராய வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Samayam Tamil 29 Jan 2022, 4:25 pm
நாகப்பட்டினம் வெளிப்பாளையம், தாமரைகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த சத்யா (வயது 34). நாகை வெளிப்பாளையம், வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 38). இவர்கள் 2 பேரும் கீழ்வேளூர் அருகே தேவூர், தெற்காலத்தூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்து வந்தனர்.
Samayam Tamil crime women


இவர்கள் மீது சாராயம் விற்பனை தொடர்பாக கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சத்யா, முத்துலட்சுமி மீது சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டு திருவாரூர் மகளிர் சிறையில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதால் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், ஆகியோர் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹருக்கு பரிந்துரை செய்தனர்.

தகாத உறவில் பிறந்த குழந்தை கொலை, இளம்பெண்ணுடன் சென்ற சிறுவன், மகளிடம் அத்துமீறிய தந்தை..!

இதன் பேரில் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கீழ்வேளூர் போலீசார் திருவாரூர் சிறையில் இருந்த 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி