ஆப்நகரம்

ஹோட்டல் கழிவறையில் பொருத்தப்பட்ட கேமரா... அலட்சியத்தில் நிர்வாகம்..

பூனாவில் ஐ.டி. நிறுவனத்தில் இயங்கி வரும் உணவக கழிப்பறையில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்டிருந்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 8 Nov 2019, 2:23 pm
பூனாவில் இஞ்சிவாடி பகுதியில் தகவல் தொழிநுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த ஞாயிற்று கிழமை அன்று இந்த நிறுவனத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு பெண்கள் கழிவறையின் மேல் சுவற்றில் இருந்த துளையில் ரகசிய கேமரா பொருத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
Samayam Tamil ஹோட்டல் கழிவறையில் பொருத்தப்பட்ட கேமரா... அலட்சியத்தில் நிர்வாகம்..


உடனே அவர் இது குறித்து உணவக மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். அதற்கு அந்த மேலாளர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி கழிப்பறையில் இருந்த கேமராவை அகற்றினார். இதனால் அந்த பெண் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சென்றுருக்கிறார்.



ஆனால் உணவக நிர்வாகம் இந்த சம்பவத்தை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த இளம்பெண் கழிப்பறைக்குள் வைக்கப்பட்டிருந்த கேமராவை தனது செல்போனில் படம் பிடித்து அன்றைய நாளிலேயே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

டிக் டாக் செய்து வந்த மனைவியைக் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர்...

அதை நிறைய பேர் ஷேர் செய்ததை அடுத்து அந்த விவகாரம் பூனா நகர போலீசாரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து போலீசார் பி ஹேவ் உணவகத்திற்கு சென்று லேசான விசாரணை மேற்கொண்டதில், ஹோட்டல் மேலாளர் மன்னிப்பு தெரிவித்ததோடு, கேமராவை பொருத்திய குற்றத்தில் துப்புரவு ஊழியர்களிடம் விசாரணை செய்து வருவதாகவும், ஞாயிற்று கிழமை அன்று யார் யார் பணியில் இருந்தார்கள் என்பதை குறித்து ஆய்வு செய்து வருகிறோம் ஆனால் ஒரு சிலர் வேலைக்கு வருவதில்லை அவர்களை பற்றிய விவரங்களையும் சேகரித்து வருகிறோம் என கூறினார்.

தனிமையில் இருந்த ஐ.டி பெண்,,. 23 இடங்களில் கத்தி குத்து.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..!

இதையடுத்து போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டதால் குற்றவாளி சிக்கியுள்ளதாகவும்அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 72 இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதுபோன்ற பல்வேறு நிறுவனங்களில் உள்ள கழிவறைக்குள் பெண்கள் சென்ற பிறகு தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி