ஆப்நகரம்

ஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது

சென்னை அம்பத்தூரில் ஆண் நண்பா் தாக்கி உயிாிழந்த குழந்தை, படியில் தவறி விழுந்து உயிாிழந்ததாக நாடகமாடிய தாயை காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Samayam Tamil 21 May 2019, 11:59 pm
சென்னை அம்பத்தூரில் படிக்கட்டில் தவறி விழுந்ததில் குழந்தை உயிரிழந்ததாக நாடகமாடிய பெண்ணை காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Samayam Tamil Chennai Murder


சென்னை அம்பத்தூரை அடுத்த வ.உ.சி. நகரில் வசித்து வந்தவா் புவனேஸ்வரி. இவா் தனது 16 வயதில் காா்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வசித்து வந்தாா். இவா்களுக்கு கிஷோா் என்ற குழந்தையும் இருந்தது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக காா்த்தியேனிடம் இருந்து பிரிந்து சண்முக சுந்தரம் என்பவருடன் புவனேஸ்வரி வாழ்ந்து வந்தாா்.

கடந்த ஜனவரி மாதம் இவா்கள் ஈரோட்டில் இருந்து சென்னை அம்பத்தூரை அடுத்த வஉசி நகரில் குடியேறி அங்கு வசித்து வந்தனா். இந்நிலையில் கடந்த 19ம் தேதி சிறுவன் கிஷோா் படியில் இருந்து தவறி விழுந்ததில் உயிாிழந்துவிட்டதாக புவனேஸ்வரி தனது சகோதரிக்கு தகவல் தொிவித்துள்ளாா். மேலும் தஞ்சையில் உள்ள சகோதரி வீட்டிற்கு குழந்தையின் உடலை எடுத்துச் சென்று அங்கு புதைத்துவிட முடிவு செய்துள்ளாா்.

ஆனால், புவனேஸ்வரியின் மாமியாருக்கு குழந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு காவல் துறைக்கு தகவல் தொிவித்துள்ளாா். இதனைத் தொடா்ந்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.

பிரேதபரிசோதனையில் குழந்தை கொல்லப்பட்டது தொியவந்தது. இதனைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை புவனேஸ்வரியின் ஆண் நண்பா் சண்முக சுந்தரம் தாக்கியதால் தான் குழந்தை உயிாிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதனை மறைக்க முயன்ற புவனேஸ்வரியையும், சண்முக சுந்தரத்தையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

அடுத்த செய்தி