ஆப்நகரம்

கொடுத்த பணத்தை கேட்ட தொழிலாளி வெட்டி படுகொலை: 3 பேர் கைது

சிவகங்கை அருகே கூலி தொழிலாளியை படுகொலை செய்த கும்பலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Oct 2021, 3:49 pm
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் லட்சுமணன்(48), சுமைதூக்கும் பணியாளாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், காரைக்குடி சேர்வார் ஊரணி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு பணம் கொடுத்துள்ளார் பிரகாஷ்.
Samayam Tamil representative image


பிரகாஷ் ஒரு வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். இது தெரியாத லெட்சுமணன் பிரகாஷ் வீட்டுக்கு பணத்தை வாங்க சென்றபோது அவரது மனைவி அம்சவள்ளியிடம் கேட்டுள்ளார் மாமனார் மற்றும் கொழுந்தனாரிடம் 'உங்க அண்ணன் ஜெயிலுக்கு போயிட்டாரு பணம் கொடுத்தவர் வீடு தேடி வருவது எனக்கு அசிங்கமாக உள்ளது' என்று கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களான பிரான்மலை,வேல்பாண்டி ஆகியோரை அழைத்து சென்று நேற்று இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு திரும்பும் வழியில் லட்சுமணனை வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

எடப்பாடியை கைது செய்க... சசிகலா தொண்டர் தற்கொலை முயற்சி..!

கொலை சம்பவம் குறித்து காரைக்குடி டிஎஸ்பி வினோஜி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குன்றக்குடியில் பதுங்கியிருந்த மணிகண்டன், பிரான்மலை, வேல்பாண்டி ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் அம்சவல்லி, மணிகண்டன் தந்தை சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர். படுகொலை சம்பவத்தில் சாதி மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

அடுத்த செய்தி