ஆப்நகரம்

வாடஸ் ஆப்பில் பிளாக் செய்த காதலியை குத்தி கொலை செய்த காதலன்

கடலூரைச் சேர்ந்த பெண்ணை கத்தியால் குத்தி கொன்றது தொடர்பாக அவரது காதலன் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை அடையச் செய்துள்ளன.

Samayam Tamil 10 May 2019, 12:54 pm
கடலூரில் வாடஸ் ஆப்பில் பிளாக் செய்த காதலியை ஆத்திரமடைந்த காதலன் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil காதலியை கத்தியால் குத்தி காதலன் வெறிச்செயல்
காதலியை கத்தியால் குத்தி காதலன் வெறிச்செயல்


விருத்தாசலம் அடுத்த பவழங்குடி என்ற கிராமத்தை சேர்ந்த திலகவதி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். இதை பார்த்து அதிர்ந்து போன உறவினர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி திலகவதி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திலகவதியை வீடுபுகுந்து கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது காதலர் ஆகாஷ் என்பவரை அகைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளிக்கூடத்திலிருந்து நண்பர்களாக இருந்த ஆகாஷ் மற்றும் திலகவதி நாளிடைவில் காதலர்களாக மாறியுள்ளனர். ஆனால் ஆகாஷ் படிப்பில் நாட்டமில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருவது திலகவதிக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக அவரிடம் பலர் பேசியுள்ளார். எனினும், திலகவதி பேச்சை ஆகாஷ் கேட்காமல் இருந்துள்ளார்.

இதனால் ஆகாஷுடனான உறவை முறித்துக்கொண்ட திலகவதி அவரை வாட்ஸ் ஆப்பிஸ் பிளாக் செய்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், திலகவதியை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஆகாஷ், திலகவதியை கத்தியால் குத்திவிட்டு அங்கியிருந்து தப்பிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த பெண் தனது மாமாவுக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். அவரும், மற்ற உறவினர்களும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திலகவதி உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி