ஆப்நகரம்

புதுக்கோட்டையில் வாலிபா் முகம் சிதைக்கப்பட்டு கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வாலிபா் ஒருவா் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 23 Apr 2019, 4:06 pm
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil Murder Knife


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாயமான முருகேசன் இன்று காலை புதுக்கோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் தலை சிதைக்கப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையிலான காவல் துறையினா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அடுத்த செய்தி