ஆப்நகரம்

சோளிங்கர் அருகே கழுத்தறுத்து கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட இளைஞர் சடலம் மீட்பு!

வேலூர் மாவட்டம் சோளிங்கர்-வாலாஜாபேட்டை சாலையில் ஜம்புகுளம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Samayam Tamil 23 Jul 2019, 8:55 pm
வேலூர் மாவட்டம் ஜம்புகுளம் அருகே விவசாயக் கிணற்றில் கழுத்தறுத்து வீசப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சோளிங்கர் அருகே கழுத்தறுத்து கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட இளைஞர் சடலம் மீட்பு!
சோளிங்கர் அருகே கழுத்தறுத்து கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட இளைஞர் சடலம் மீட்பு!


வேலூர் மாவட்டம் சோளிங்கர்-வாலாஜாபேட்டை சாலையில் ஜம்புகுளம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் சடலம் ஒன்று இருப்பதாக கொண்டப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சோளிங்கர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு சடலத்தை மீட்டனர்.

நெல்லையில் முன்னாள் மேயர் உட்பட மூன்று பேர் வெட்டி படுகொலை!

தொடர்ந்து அரக்கோணம் டி.எஸ்.பி.ஜெயசுப்ரமணி மற்றும் சோளிங்கர் காவல் ஆய்வாளர் அண்ணாத்துரை ஆகியோர் சடலத்தை பார்த்த போது அந்த உடலில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி அருகே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண் எரித்து கொலை!

இந்த சம்பவம் குறித்து கொண்டப்பாளையம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் சோளிங்கர் ஜம்புகுளம் அடுத்த காட்ரம்பாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சுப்பிரமணி(23) என்பதும் ஓட்டுராக வேலைபார்த்து வருவதும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுப்ரமணி கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி