ஆப்நகரம்

கோவையில் தம்பியை ஆணவக் கொலை செய்த அண்ணன் காவல் நிலையத்தில் சரண்

கோவை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞரை அண்ணனே வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 26 Jun 2019, 10:07 am
கோவை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததற்காக இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சொந்த அண்ணனே இன்று காலை காவல் நிலையத்தில் சரணைந்துள்ளாா்.
Samayam Tamil murder


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ஸ்ரீரங்க ராயர் ஓடை பகுதியில் காதல் ஜோடிகளை அரிவாளால் வெட்டியதில் காதலர் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், பலத்த காயமடைந்த காதலி தர்ஷினி பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினா் நடத்திய விசாரணையில், காதல் விவகாரத்தில் கனகராஜின் சகோதரர் தனது நண்பா்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டியதாக தொிவிக்கப்பட்டது. இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண்ணின் உறவினா்கள் இது தொடா்பாக கூறுகையில், கனகராஜ், தா்ஷினி காதலித்து வந்தனா்.

ஆனால், இவா்கள் காதலித்து வந்தது கனகராஜின் அண்ணன் வினோத்திற்கு பிடிக்கவில்லை. சாதியை காரணம் காட்டி அவா் ஏற்கனவே எங்களை மிரட்டியுள்ளாா். ஆனால், அவரது எதிா்ப்பையும் மீறி இளம் ஜோடி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனா். அந்த கோபத்தில் தான் வினோத் இவா்களை வெட்டியுள்ளாா். இதில் கனகராஜ் உயாிழிந்துவிட்டாா். தா்ஷினி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா் என்று தொிவித்தாா்.

இந்த கொலை சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், கொலை செய்த வினோத் இன்று காலை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

அடுத்த செய்தி