ஆப்நகரம்

திருமணமான பெண்ணுடன் தகாத உறவு... புதுமாப்பிள்ளை தற்கொலை... நிர்க்கதியான கர்ப்பிணி

கன்னியாகுமரி அருகே தகாத உறவின் காரணமாக புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Jun 2021, 2:22 pm
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த சங்கரன்புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (25). இவர் தேரூர் ஊராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சுரேஷ்குமாருக்கு அதே அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த வித்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil காதல் ஜோடி


வித்யா ஏற்கனவே திருமணமானவர். இந்த நிலையில் பணிக்கு வந்து சென்ற வித்யாவுக்கும், சுரேஷ்குமாருக்கும் இடையே திருமண உறவை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் சுரேஷ்குமாரின் வீட்டுக்கு தெரிய வரவே அவரை ஊராட்சி வேலைக்கு செல்ல வேண்டாம் என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

இதையடுத்து, சுரேஷ்குமார் கேஸ் சிலிண்டர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். மேலும், சுரேஷ்குமாருக்கு தென்காசியில் பெண் தேடி கடந்த வருடம் திருமணம் செய்து வைத்துள்ளனர். அப்பெண் தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், சில காலம் வித்யாவிடம் பழகாமல் இருந்து வந்த சுரேஷ்குமார் மீண்டும் பழக ஆரம்பித்துள்ளார்.

இருவரும் வெளியில் சென்று சந்தித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வித்யாவின் கணவருக்கு தெரிய வரவே மனைவியை எச்சரித்துள்ளார். இதையடுத்து, சுரேஷ்குமாரும், வித்யாவும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து இரு வீட்டாரும் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் காதல் ஜோடிகளை தேடி வந்த போலீசாருக்கு இருவரும் கூடங்குளம் பகுதியில் தஞ்சம் அடைந்திருப்பது தெரிய வந்தது.

மணல் திருட்டு அட்டூழியம்... அந்த குழிக்குள் மூச்சுத்திணறி சிறுவன் பலி... நடவடிக்கை எடுக்குமா அரசு?

சம்பவத்தன்று தங்களை போலீசார் நெருங்கிவிட்டதை நினைத்து அதிர்ச்சியடைந்த சுரேஷ்குமாரும், வித்யாவும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுரேஷ்குமார் இறந்து விடவே வித்யா ஆபத்தான நிலையில் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணத்துக்கு பின்னரும் தகாத உறவில் ஈடுபட்டு வந்த நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொள்ள, கர்ப்பிணி பெண் நிர்கதியாகி நிற்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி