ஆப்நகரம்

சேலத்தில் தக்காளியை திருடியவர் சிறையில் அடைப்பு..!

சேலம் அருகே தக்காளி பெட்டியை இருசக்கர வாகனத்தில் திருடிச் சென்ற இளைஞரை மகுடஞ்சாவடி போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Samayam Tamil 29 May 2022, 4:18 pm
சேலம் இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம் பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் அதே பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு தக்காளி சரக்கு இறக்குபவர் கடந்த வியாழக்கிழமை 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டியை இறக்கி வைத்துள்ளார்.
Samayam Tamil தக்காளி திருடியவர் கைது
தக்காளி திருடியவர் கைது


இந்நிலையில் கடை உரிமையாளர் சங்கர் கடையைத் திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் முன்பு ஒரு கிரேடு தக்காளி பெட்டி மட்டுமே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தக்காளி இறங்கியவரிடம் கேட்டபோது அவர் இரண்டு பெட்டி இறக்கி வைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடையில் வைக்கப்பட்டிருந்த இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தக்காளி பெட்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சங்கர் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தக்காளி பெட்டியை திருடிச் சென்ற மர்ம நபரின் இருசக்கர வாகனத்தின் நம்பரை வைத்து விசாரணை செய்தனர். அதில், அவர் வெண்ணந்தூர் தங்கசாலை பகுதியை சேர்ந்த (32) சின்ராஜ் என்பதும் இவர் ஏற்கனவே சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்ததும் தெரியவந்தது.

நண்பனை அடித்தவர்களை தட்டி கேட்ட ரவுடி... கடத்தி சென்று கொன்ற கும்பல்.. சென்னை அருகே பயங்கரம்

இந்நிலையில் இளம்பிள்ளை பகுதியில் தக்காளி திருடிய வழக்கில் மகுடஞ்சாவடி போலீசார் சின்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி