ஆப்நகரம்

நாடோடிகள் பட நடிகையை காதலித்து ஏமாற்றியதாக நடிகர் கைது..! வயசு காரணமா?

சென்னையில் துணை நடிகையை காதலிப்பதாக கூறி பழகி, பண மோசடி செய்து கம்பி நீட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 11 Jun 2020, 4:58 pm
சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். 32 வயதான இவர் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009 இல் வெளியான நாடோடிகள் படத்தில் நடித்த துணை நடிகையை காதலித்து வந்துள்ளார்.
Samayam Tamil nadodigal actress cheated by a man


நடிகையுடன் நெருக்கமாக இருந்த அவர் திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரிடம் பணம், நகையை பெற்றுள்ளார். தியாகராஜன் தன்னை திருமணம் செய்துகொள்வார் என்று நம்பி பணத்தையும், நேரத்தையும் செலவிட்டு வந்த நடிகை தற்போது அவரால் ஏமாற்றப்பட்டு டி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தியாகராஜன் என்னை காதலிப்பதாக கூறி பழகி, பணம், நகை ஆகியவற்றை பெற்றுக்கொண்டார். இப்போது அவருக்கு சென்னை மாநகராட்சியில் அலுவக வேலை கிடைத்துள்ளது. இதனால் எனக்கு வயது அதிகம் எனக்கூறி என்னிடம் தொடர்பை முறித்துக்கொண்ட அவர் சந்திக்கவும் மறுத்துவிட்டதாக நடிகை புகார் அளித்துள்ளார்.

முதலிரவுக்கு சென்ற புதுமணப்பெண் பலி..! மனநலம் பாதித்த மாப்பிள்ளை...

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தியாகராஜன் மீது பாலியல் வன்கொடுமை, பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

அடுத்த செய்தி