ஆப்நகரம்

பள்ளி மாணவிகளுக்கு பீர் கொடுத்து போதையாக்கிய வாலிபர்... கரூரில் அதிர்ச்சி சம்பவம்

கரூரில் 3 மாணவிகளுக்கு மது வாங்கி குடிக்க வைத்த விவகாரத்தில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 12 Aug 2022, 7:26 pm
கரூரில் கடந்த 10ம் தேதி இரவு சர்ச் கார்னர் பகுதியில் 2 மாணவிகள் மது போதையில் படுத்திருந்தனர். அவர்களை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி, பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் பள்ளி மாணவியில் தாய் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil karur news


அதில் தனது மகள் 11ம் வகுப்பு பசுபதீஸ்வரா பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்ததாகவும், கடந்த பொது தேர்வில் தோல்வியுற்ற நிலையில் கடந்த 10ம் தேதி பசுபதிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தேர்வு எழுதுவதற்காக சென்றுள்ளார். தேர்வு முடிந்த பிறகு அந்த மாணவி சக 2 தோழிகளுடன் தன் ஆண் நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பசுபதிபாளையம் வடக்கு தெருவில் உள்ள தீனா என்கின்ற தினேஷ் வீட்டிற்கு சென்ற போது, red wine மற்றும் பீர் ஆகியவற்றை குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், குடிக்க மாட்டேன் என்று சொல்லியதற்கு குடிக்கவில்லை என்றால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும், அதனால் மாணவிகள் 3 பேரும் red wine மற்றுன் பீரை குடித்ததால் வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

கரூரில் மாணவி தற்கொலை... பாட்டி வீட்டில் தங்கியிருந்த போது விபரீதம்..!

இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு பள்ளிக்கு செல்லும் வழியில் சர்ச் கார்னர் பகுதியில் வாந்தி மயக்கத்தில் கிடந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் தினேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி