ஆப்நகரம்

சிறுமியிடம் குடும்பம் நடத்திய வாலிபர் கைது..!

திண்டுக்கல் அருகே சிறுமியிடம் குடும்பம் நடந்து அந்த வாலிபர் பொக்சோவில் கைது

Samayam Tamil 7 Jan 2021, 8:27 pm
திண்டுக்கல் மாவட்டம் தொட்டனம்பட்டியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகன் மதுபாலன். இவருக்கு வயது 19. மதுபாலன் ஜம்புளியம்பட்டியில் உள்ள சித்தி வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைக் சேர்ந்த 14 வயது சிறுவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்துள்ளனர்.
Samayam Tamil file pic


இந்நிலையில், சிறுமியை அழைத்துக்கொண்டு மதுபாலன் பல இடங்களில் வளம் வந்துள்ளார். இந்த சூழலில் ஒரு நாள் சிறுமி வீட்டில் மாயமாகியதால் அவரது பெற்றோர் திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.

சித்ரா வழக்கில் அதிரடி, 'இதாங்க நடந்த உண்மை', நீதிமன்றத்தில் ஹேமந்த் கொதிப்பு..!

அப்போது, மதுபாலனும், சிறுமியும் தனியாக வீடெடுத்து வசித்து வந்ததை கண்டறிந்த போலீசார் மதுபாலனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், மதுபாலன் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமியை சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் போக்சோ வழக்கில் மதுபாலனையும், அவருக்கு உடந்தையாக இருந்த சித்தியையும் கைது செய்தனர்.

அடுத்த செய்தி