ஆப்நகரம்

பணக்கார சிறுமியுடன் நாடக காதல்..? 5 ஆண்டுகள் சீரழிப்பு, 9 லட்சம் உருவிய புள்ளிங்கோ

சென்னையில் 17 வயது பணக்கார சிறுமியுடன் 5 வருடங்களாக நெருக்கமாக இருந்துவிட்டு பணம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது.

Samayam Tamil 16 Apr 2022, 5:17 pm
சென்னையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து மிரட்டி ரூ.7 லட்சம் பணம் பறித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil சிறுமியை காதலித்து ஆபாச வீடியோ காட்டி மிரட்டி பணம் மோசடி


இந்த சம்பவம் குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

சென்னை, தி.நகரில் வசித்து வரும் 17 வயது சிறுமி மனக்கவலையுடன் இருந்ததால், சிறுமியின் தாயார் விசாரித்தபோது, இச்சிறுமியை 12 வயது முதல் ஞானபிரகாசம் என்ற வாலிபர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பலமுறை உடலுறவு கொண்டு, பின்னர் மிரட்டி சிறிது சிறிதாக என ரூ.7 லட்சம் பணம் பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். இது குறித்து சிறுமியின் தாயார் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், மேற்படி சிறுமி 8ம் வகுப்பு படிக்கும்போது அறிமுகமான ஞானபிரகாசம் (20) என்ற வாலிபர் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி பழகியுள்ளார். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் பலமுறை சிறுமியுடன் உடலுறவு கொண்டதும், பின்னர் சிறுமியை மிரட்டி அவரிடமிருந்து சிறிது சிறிதாக பணம் பறித்து மொத்தம் ரூ.7 லட்சம் வரை பணம் பறித்துள்ளதும் தெரியவந்தது.

அசோக்நகர் நகர் மகளிர் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஞானப்பிரகாசம் கூறிய தகவல்கள் போலீசாரை திடுக்கிட வைத்தன. கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ஞானப்பிரகாசம் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளான். இந்த நிலையில் டிரம்ஸ் வாசிப்பில் அசத்தி வந்த ஞானப்பிரகாசம் பேக்கரி கடையிலும் வேலை பார்த்து வந்துள்ளான். இவனது டிரம்ஸ் வாசிப்பால் கிரங்கிபோன தி. நகரைச் சேர்ந்த சிறுமி ஞானப்பிரகாசத்தை 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே காதலித்துள்ளார். இவனும் காதலிப்பதாக கூறி கடந்த 5 ஆண்டுகளாக பழகி வந்துள்ளான். பல நேரங்களில் சிறுமியுடன் உடலுறவு வைத்து வந்த ஞானப்பிரகாசம் அதனை சிறுமிக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். சிறுமி பணக்கார குடும்பம் என்பதால் ஞானப்பிரகாசம் ஆரம்ப முதலே சிறுமியிடம் சிறுக சிறுக 2 லட்சம் ரூபாய் வரை பணத்தை கறந்ததாக கூறப்படுகிறது.

1 கோடி மதிப்பிலான 264 பவுன் நகைகள் கொள்ளை; மதுரையில் இருவர் கைது... நகை என்னானது?

மேலும், சிறுமி போட்டிருந்த 1 சவரன் நகையையும் கழட்டி காதலனுக்கு கொடுத்துள்ளார். அதையும் விற்று உல்லாச வாழ்க்கையை வந்த ஞானப்பிரகாசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் வாங்க வேண்டும் எனக்கூறி சிறுமியிடம் 7 லட்சம் ரூபாய் கேட்டுள்ளான். இவ்வளவு தொகையை தர முடியாது என சிறுமி சொன்னதற்கு, இருவரும் ஆபாசமாக இருந்த வீடியோக்களை காட்டி, பணம் கொடுக்காவிட்டால் வீடியோ இணையத்தில் கசிந்து விடும் என மிரட்டியுள்ளான்.

இதனால் பயந்துபோன சிறுமி வேறு வழியின்றி தனது தந்தையிடம் இருந்த 7 லட்சம் ரூபாயை எடுத்து வந்து கொடுத்துள்ளார். ஞானப்பிரகாசும் அந்த பணத்தில் காரை வாங்கியுள்ளான். இந்நிலையில்தான் சிறுமியின் காதல் விவகாரம் அவரது வீட்டுக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ஞானப்பிரகாசத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி