ஆப்நகரம்

ஆபாச வீடியோ கால் பேச்சால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்... உஷார்...

நாமக்கல்லில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

Samayam Tamil 24 Jun 2022, 12:51 pm
கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படத்தை வைத்து பாலியல் துன்புறுத்துதல் கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Samayam Tamil கைதான வாலிபர்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த R.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்(24). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் மோட்டார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கல்லூரி மாணவியுடன் ஆபாசமாக வீடியோகால் மூலம் பேசி வந்த நிலையில், அதனை அவரது போனில் பதிவுசெய்துள்ளார். பின்னர் அந்த ஆபாச படங்களை காட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளாதாக கூறப்படுகிறது.

எஸ்ஐ-யின் மண்டையை உடைத்த போலீஸ்காரர்... சிவகங்கையில் பரபரப்பு

இதற்கு கல்லூரி மாணவி மறுப்பு தெரிவிக்கவே ஆபாச படங்களை மாணவியின் தாய்க்கு மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வாலிபர் அஜீத் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி