ஆப்நகரம்

கோவையில் மாணவியுடன் பழகி, புகைப்படத்தை வைத்து மிரட்டிய வாலிபர் கைது..!

கல்லூரி மாணவியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டிய இளைஞர் கைது.

Samayam Tamil 18 Mar 2020, 2:05 pm
கோவை மாவட்டம் கணபதி நல்லாம்பாளையம் அம்மன் நகரைச் சேர்ந்த பிரசாத் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது.
Samayam Tamil கோவையில் மாணவியுடன் பழகி புகைப்படத்தை வைத்து மிரட்டிய வாலிபர் கைது


இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்த இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அந்த சமயங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பிரசாத் தனது செல்போனில் எடுத்திருக்கிறார். இதற்கிடையே பிரசாத் நடவடிக்கை பிடிக்காததால் அவரை விட்டு மாணவி விலகினார்.

மாணவிக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெற்று வந்தது. இதனை அறிந்த பிரசாத் நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை எனில் நாம் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் செய்தார்.

தெலுங்கானாவில் மீண்டும் அட்டூழியம்..! அலங்கோலத்துடன் பெண் சடலம் மீட்பு...

அதன்பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர்.

அடுத்த செய்தி