ஆப்நகரம்

தாய் குளிப்பதை வீடியோ எடுத்து மகளை படுக்கைக்கு அழைத்த வாலிபர்..!

பெரம்பலூர் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மகளை படுக்கைக்கு அழைத்த வாலிபர் கைது

Samayam Tamil 17 Apr 2022, 3:03 pm
பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் செல்வம் (33). இவர் தனது வீட்டருகே உள்ள பெண்மணி குளிப்பதை ஒளிந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதற்கு அப்பகுதியில் உள்ள இரண்டு பெண்கள் செல்வத்துக்கு உதவியதாக கூறப்படுகிறது.
Samayam Tamil crime


இந்த நிலையில், செல்வம் வீடியோவில் உள்ள பெண்ணை மிரட்டி, உனது மகள் எனது ஆசைக்கு இணங்கவேண்டும் என கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுக்கவே, உனது வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டுவிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் விசாரணை செய்த போலீசாரை செல்வத்தையும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களையும் கைது செய்தனர். மேலும், செல்வம் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பெரம்பலூரில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து அவரது மகளை ஆசைக்கு அழைத்த வாலிபரின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி