ஆப்நகரம்

தனது குடும்ப பெண்களையே ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக் பதிவு - வசமாக சிக்கிய இளைஞர்!

பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 5 Nov 2019, 9:58 am
குழந்தைகள், பெண்களுக்கான பாதுகாப்பு சமீப காலமாக மிகவும் பாதிப்படைந்து வருகிறது. இந்த சூழலில் பெண்கள் சிலரின் அந்தரங்கப் புகைப்படங்களும், வீடியோக்களும் பேஸ்புக்கில் பகிரப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.
Samayam Tamil Arrest


இதுகுறித்து விசாரித்த போலீசார், காஞ்சிபுரத்தை சேர்ந்த கயாஸ் முகமது என்ற நபரை கைது செய்துள்ளனர். இவர் முதுகலைப் பட்டம் முடித்த நிலையில், ராயப்பேட்டை தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

படித்தது பிளஸ்2... தொழில் டாக்டர்... சிக்கிய பெண்...

அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் வசித்து வந்தார். போலீசார் விசாரணையில் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கயாஸ் முகமது தொடர்ந்து ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்டிருந்தார்.

இதனால் ஆபாசமாக புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்கத் தொடங்கியுள்ளார். தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் செல்லும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து வந்துள்ளார்.

வீரப்பனை சுட்டதற்காக கிடைத்த மெடலை திருடிட்டாங்க... சத்தியமங்கலம் எஸ்.ஐ. சோகம்...

பின்னர் அவற்றை தவறாக சித்தரித்து, பேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவிட்டு வந்திருக்கிறார். இதற்கு ஆபாசமாக கருத்துகள் பதிவிட்டும் வந்துள்ளார். இந்த சூழலில் தோழி ஒருவர், கயாஸ் முகமது பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள் பதிவிடுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப குழுவினர் உதவியுடன் ஆய்வு செய்து கயாஸ் முகமதுவை கைது செய்தனர்.

லஞ்சம் கேட்ட தாசில்தாரைக் கதற கதற எரித்துக் கொன்ற விவசாயி..!

இவர் தனது குடும்ப உறுப்பினர்களையும் தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டு வந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி