ஆப்நகரம்

காதலை ஏற்க மறுத்த டீச்சர்; பட்டப்பகலில் நடுரோட்டில் இளைஞர் செய்த காரியம் - சென்னை பயங்கரம்!

பள்ளி ஆசிரியை ஒருவருக்கு நடுரோட்டில் இளைஞர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 2 Aug 2019, 9:12 am
சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்(24) ஒருவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன்(29) என்ற நபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
Samayam Tamil Arrest


இந்நிலையில் சமீபத்தில் தனது காதலை ஆசிரியையிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் காதலை ஏற்கவில்லை. இருப்பினும் விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார். பள்ளிக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் மீண்டும், மீண்டும் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

Also Read: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தின் அதிரவைக்கும் புதிய வீடியோ- அதிர்ச்சி தரும் உண்மை!

இந்நிலையில் சம்பவத்தன்று, இளம்பெண் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் வெங்கட்ராமன் சந்தித்துள்ளார். அந்த பெண்ணிடம், என் காதலுக்கு பதில் சொல்லுங்க. என் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் அவர் மறுத்து, அங்கிருந்து விலகி செல்ல முற்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமிடைந்த இளைஞர் நடுரோட்டில் அப்பெண்ணை தாக்கியுள்ளார். எப்படியோ அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

Also Read: மதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு- நெஞ்சை உருக்கும் கடிதம்!

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பல்லாவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெங்கட்ராமனைக் கைது செய்தனர். பின்னர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இவர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆந்திராவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த கோவில் செயல் அலுவலர்!

அடுத்த செய்தி