ஆப்நகரம்

குடிபோதையில் கோழிக்கறி கேட்டு தாயிடம் தகராறு செய்த அண்ணன்-பெட்ரோல் ஊற்றி எரித்த தம்பி!

குடிபோதையில் கோழிக்குழம்பு கேட்டு தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 15 May 2019, 10:39 am
சிவகங்கை அருகே குடிபோதையில் கோழிக்குழம்பு கேட்டு தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil குடிபோதையில் கோழிக்கறி கேட்டு தாயிடம் தகராறு செய்த அண்ணன்-பெட்ரோல் ஊற்றி எரித்த தம்பி!
குடிபோதையில் கோழிக்கறி கேட்டு தாயிடம் தகராறு செய்த அண்ணன்-பெட்ரோல் ஊற்றி எரித்த தம்பி!


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சூரக்குடியைச் சேர்ந்த தம்பதி ராசு-மீனாள். இவர்களது மூத்த மகன் பிரதாப், அப்பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது தாயிடம் மதியம் வைத்த கோழிக்கறியை தனக்கு கொஞ்சம் வைக்குமாறு கேட்டு தகராறு செய்தார். ஆனால் கோழிக்கறி காலியானதால் கோபத்தில் பிரதாப், சாப்பாட்டு தட்டை தூக்கி வீசி உள்ளார்.

இதைபார்த்து கொண்டிருந்த பிரதாப் தம்பி பிரதீஸ் ஏன் எப்போதும் அம்மாவிடம் சண்டை போடுகிறாய் என்று தட்டி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின் வீட்டை விட்டு வெளியே சென்ற தம்பி பிரதீஸ் இரவு மூன்று மணியளவில் வீட்டு வாசலில் படுத்து இருந்த அண்ணன் பிரதாப் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் பலத்த காயமடைந்த பிரதாப், காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பி ஒடிய பிரதீஸை செட்டிநாடு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி