ஆப்நகரம்

தம்பியைக் கொன்றவனைக் கொன்று தம்பியின் சமாதியில் ரத்தம் தெளித்த அண்ணன்!!

மதுரை கொடிமங்கலத்தில் கடந்த 9-ம் தேதி, சிவமூர்த்தி தனது மாமாவின் தோப்பிற்கு சென்றபோது, அவரை பின் தொடர்ந்த மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது

Samayam Tamil 12 Jul 2019, 9:50 am
சிவகங்கை திருப்புவனம் அருகே தம்பியை கொன்றவனை கொலை செய்து, ரத்தத்தை தம்பியின் சமாதியில் தெளித்த அண்ணன் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Samayam Tamil தம்பியை கொன்றவனை தீர்த்துக்கட்டிய அண்ணன் நீதிமன்றத்தில் சரண்!
தம்பியை கொன்றவனை தீர்த்துக்கட்டிய அண்ணன் நீதிமன்றத்தில் சரண்!


திருப்புவனம் அருகே மிக்கேல்பட்டணத்தை சேர்ந்த பாலாமணி மகன் பிரசாந்த்(22). இவர் கடந்த ஆண்டு மே மாதம் கச்சநத்தம் கிராமத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 18-ம் தேதி, பிரசாந்த் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் மாத்தூர் அருகே வேலங்குளம் கண்மாயில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சிவன் மூர்த்தி (23) கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார்.

சோழவந்தான் காவல்நிலையத்தில் கையெழுத்திட வசதியாக மதுரை கொடிமங்கலத்தில் உள்ள தனது மாமா வீட்டில் சிவன் மூர்த்தி தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி, சிவமூர்த்தி தனது மாமாவின் தோப்பிற்கு சென்றபோது, அவரை பின் தொடர்ந்த மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

இதுதொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். பிரசாந்த் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் வாட்ஸ்ஆப் குரூப்பில், கொலையான பிரசாந்தின் அண்ணன் ஊர்காவலன் பெயரில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் ‛திட்டமிட்டபடி முடித்துவிட்டேன். சிவன் மூர்த்தியை கொலை செய்து ரத்தத்தை தம்பியின் சமாதியில் தெளித்துவிட்டேன். இப்போது தனது தம்பி மகிழ்ந்திருப்பான். நான் போலீசில் சரணடைய உள்ளதாக ஊர்காவலன் கூறியிருந்தார்.

இந்த ஆடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஊர்காவலன் மதுரை மாவட்ட 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

அடுத்த செய்தி